மட்டக்களப்பில் நடந்த சோகம்.. கோவிலுக்கு பெற்றோர் போக விடாததால் சிறுவன் எடுத்த முடிவு.!

0
32

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள சாளம்பங்கேணி பிரதேசத்தில் தாந்தாமலை கோயிலுக்கு பெற்றோர் போக விடாததையடுத்து 12 வயது சிறுவன் ஒருவர் உயிர்மாய்த்துக்கொண்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.

சாளம்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் சம்பவதினமான நேற்று தந்தாமலை கோவிலுக்கு போகப் போவதாக பெற்றோரிடம் கோரிய நிலையில் அதற்கு பெற்றோர்சனிக்கிழமை (09) தீர்த்த உற்சவத்துக்கு செல்வதாகவும் அப்போது போகலாம் என தெரிவித்த நிலையில் மனமுடைந்த சிறுவன் உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து சிறுவனின் சடலம் மீட்க்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.