தாயை போட்டுத்தள்ளிய மகள் கைது.!

0
20

தனது தாயைக் கழுத்து நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குருநாகல், வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்தெனிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

ரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய தாயே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர் பில் தாயின் 32 வயதுடைய மகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.