யாழில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.!

0
126

யாழ்ப்பணம் – நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகழக மைதானத்தில் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் துயரச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணியளவில் நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக மைதானத்தில் உதைப்பந்தாட்டம் விளையாடிய இளைஞர் மீது கோல் கம்பம் வீழ்ந்து ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்ற வயது 29 என்ற இளைஞரே சிகிசை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. (Photos-FB)