வரி செலுத்தாமல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 600 சிகரெட்டுகளை வைத்திருந்த வெளிநாட்டவர் ஒருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ரொட்டுன்டா கார்டன்ஸ் பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர் 40 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.