மட்டக்களப்பு, வாகரை, கருவப்பங்கேணி பகுதியில் குளத்திற்கு நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியிலுள்ள கருவம்பஞ்சோலை குளத்தில் இன்று (06) மாலை 3 சிறுவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11 வயதான 2 சிறுமிகளும் 10 வயதான ஒரு சிறுவனுமாக 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.பி.எச். சில்வா தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.