குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு..!

0
331

கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருகைத்தரும் பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கான டோக்கன் விநியோகம் முற்பகல் 6.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வௌியிடப்பட்ட முழுமையான அறிக்கையை கீழே காணலாம்.