வெளிநாட்டு ஆசைகாட்டி 150 நபர்களிடம் 5 கோடி ரூபா மோசடி; கொழும்பில் சிக்கிய போலி முகவர்.!

0
9

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் 5 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளையைச் சேர்ந்த 37 வயதுடையவர்.

இந்த சந்தேக நபர் நேற்று மாலை கிருலப்பனை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டு கொம்பனிவீதி பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர், கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி சந்தேக நபரைக் கைது செய்தது.

சம்பவம் குறித்து கொம்பனிவீதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.