வேட்டை துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு..!

0
23

மொனராகலையில் விலங்குகளை வேட்டையாடும் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் நேற்று புதன் கிழமை உயிரிழந்ததாக சியம்பலாந்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சியம்பலாண்டுவ, கலயகேவத்தை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சியம்பலாந்துவ, சூரியதலாவாவில் உள்ள கோழிப் பண்ணை வழியாக அந்த நபர் நடந்து சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கி வெடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.