யாழிலிருந்து சென்ற தனியார் பேரூந்துடன் சிறிய லொறி ஒன்று மோதியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு.!

0
45

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து நேற்று சனிக்கிழமை சிறிய ரக லொறியின் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் எட்டு பேர் மதவாச்சி மற்றும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மதவாச்சி, கடவத்கம, ஹல்மில்லவெவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 52 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் லொறியில் பயணித்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பேருந்த வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.