இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் கவுரிகுந்த் வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி சென்ற ஹெலிகாப்டர் கவுரிகுந்த் பகுதியில் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் பயணித்த விமானி உள்பட 6 பேரும் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்களுடன் மீட்புப் படை விரைந்துள்ளது. (Video-FB)