நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகோற்சவம் தொடர்பான அறிவிப்பு.!

0
68

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம், எதிரு்வரும் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்த உற்சவத்துக்கான கொடிச்சீலை, வியாழக்கிழமை, ஆலய உற்சவ குருமணியிடம் பக்தர்களால் ஒப்படைக்கப்பட்டது.

மகோற்சவம் தொடர்பான முக்கியமான நிகழ்வுகள் கீழ்வருமாறு நடைபெறவுள்ளன:

ஜூலை 9ஆம் திகதி காலை – 14ஆம் திருநாள் தேர் திருவிழாவும், ஜூலை 10ஆம் திகதி காலை – தீர்த்த உற்சவம், மாலை கொடியிறக்கமும் இடம்பெறும்.

மகோற்சவ நாட்களில் பக்தர்களின் வசதிக்காக,விசேட படகு மற்றும் பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், முதலுதவி மற்றும் பாதுகாப்பு பணிக்காக –சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ், சாரணர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் உள்ளிட்ட குழுக்கள் ஈடுபடவுள்ளனர்.