விமான விபத்தில் உயிர் தப்பிய இளைஞன் கூறியது.!

0
96

சீட் உடைந்து தனியாக வந்ததால் அவசர வழி வழியாக உயிர் தப்பினேன் என்று விஸ்வாஸ் ரமேஷ் குமார் பேட்டி அளித்துள்ளார்.

புறப்பட்ட 30 விநாடிகளில் பெரும் சத்தத்துடன் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் என்னைச் சுற்றிலும் உடல்கள் சிதறிக் கிடந்தன. ஒரு பக்க அவசர வழி சேதமடைந்த நிலையில் மறுபக்க அவசர வழி வழியாக வெளியேறினேன் என்றார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற விமானம் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 168 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 7 போர்ச்சுகீசியர், 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணம் செய்தனர்.

இதில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்துள்ளனர்.