முல்லைத்தீவில் திடீரென தோன்றி மறைந்த பௌத்த அடையாளங்கள்..! வீடியோ

0
59

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது.

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒன்றில் இரு நாட்களுக்கு முன்னர் இரவோடு இரவாக பௌத்த சமயத்தை போதிக்கும் வகையில் மகிந்த தேரரின் இலங்கை வருகையும், பௌத்த மதத்தினை ஸ்தாபித்தலும் என தலைப்பிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பதாதை இனந்தெரியாதோரால் நேற்றையதினம் (11) இரவு கிழித்தெறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.