வற்றாப்பளைக்கு பொங்கலுக்கு சென்று திரும்பிய இளைஞன் விபத்தில் உயிரிழப்பு..!

0
187

முல்லைத்தீவு – வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று வீடு திரும்பிய இளைஞன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

மோட்டார் சைக்கிளிலில் ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் விபத்துக்குள்ளாகிய இளைஞன் வாய்க்காலினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நித்திரை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.