காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஸ்ரீமதி மல்லிகா கைது.!

0
31

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் எம். ஆர் ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை (05) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் செயற்படுத்தப்பட்ட வேருஸ் ஆறு திட்டத்தில் 27.6 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.