யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் கலாசார உத்தியோகத்தராகப் பணிபுரிந்த நிலையில் அண்மையில் ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் அகால மரணமடைந்த சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் அவர்களின் மகனான அக்ஷய், மருத்துவ சிகிச்சை பலனின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த விபத்துத் துயரங்கள் அப்பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
கடந்த காலப்பகுதியில் வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்த்தில், பிரபாகரன் குருக்கள் மரணித்த நிலையில், அக்க்ஷயும், அவரது த தாயாரான சீதாலக்ஷ்மியும்(யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்) படுகாயமடைந்திருந்தனர்.
தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பயனளிக்காத நிலையில் அக்க்ஷய் இன்று மரணமடைந்துள்ளார். இந்தத் தகவலை சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரனின் சகோதரரான திவாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அக்ஷய் பிரபாகரன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு கற்றுவந்தவராவார்.
தந்தையின் அகால மரணத்தின் அதிர்ச்சியிலிருந்து குடும்பத்தினர் மீளாத நிலையில், தற்போது அவரது புதல்வனும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.(Video-FB)