முல்லைத்தீவு – உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு – உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது தோணியில் இருந்த இருவரும் நீரிற்குள் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன் எனும் இருவரே உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவிகள் இருவர் கோயில் கேணியில் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் பலியாகி உள்ளனர்.
ஒரே நாளில் 4 உயிர்கள் போயிருக்கிறது.