மூதூரில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

0
97

யானை தாக்குதலுக்கு உள்ளாகிய முதியவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மூதூர் – கட்டைபறிச்சான் பகுதியைச் சேர்ந்த சிவக்கொழுந்து இராசரெத்தினம் (வயது 75) என சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த நபர , தனது வயலுக்கு குருவிக் காவலுக்குச் சென்றபோது கணேசபுரம் வீதியில் வைத்து இடைமறித்து யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.