ஒட்டுசுட்டான் பாடசாலை வளாகத்திற்கு மாணவர்களை துரத்தி குத்திய தேன்பூச்சிகள்.. 63 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

0
29

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய கட்டிடம் ஒன்றிற்குள் இருந்த தேன் கூடு கலைந்து வலய மட்ட விளையாட்டுக்காக வந்திருந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தித் துரத்தி குத்தியதில் 63 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்று (30) காலை பாடசாலை சென்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேன் பூச்சிகள் குத்தியதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 63 பேர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆண் ஆசிரியர்கள் – 3, பெண் ஆசிரியர் – ஒருவரும், பெண் மாணவர்கள் 24, ஆண் மாணவர்கள் 18 ஆக மொத்தம் 46 பேர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு ஒட்டிசுட்டான் வைத்தியசாலையில், பெண் ஆசிரியர்கள் 03, ஆண் ஆசிரியர் ஒருவரும், ஆண் மாணவர்கள் 9 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.