அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு முன்பாக டிப்பர் வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நபர் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இச்சம்பவம் இன்று மதியம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் பாலமுனையை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.