மலையகத்தில் நடந்த விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
106

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுள்ள பகுதியில் நேற்றிரவு 7.30 இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானார்.

வெதமுல்லயிலிருந்து கெமிலிதன் பிரதேசத்திற்கு மரக்கறி ஏற்றுவதற்காக பயணித்த லொறி ஒன்றை வழியில் நிறுத்திவிட்டு இறங்கிய லொறியின் சாரதி, லொறி டயருக்கு கல் ஒன்றை வைக்க முற்பட்ட போது குறித்த லொறி தானாக நகர்ந்து சாரதி மீது ஏறி சென்றுள்ளது.

இதனை தொடர்ந்து லொறி சாரதியை பிரதேச மக்கள் உடனடியாக அருகிலுள்ள தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இருப்பினும் சிகிச்சைக்காக கொண்டு சென்ற சாரதி உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர், தற்போது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலியானவர் 33 வயதுடைய 1 பிள்ளையின் தந்தை ஆவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.