கொகரெல்ல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி நபரொருவருடன் இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே குறித்த சார்ஜன்ட் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி தாக்குதல் நடத்துவதைக் காட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இப்பாகமுவ – மடகல்லே வீதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஆண் மற்றும் பெண்ணொருவரை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்திய போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து குருநாகல் மாவட்ட I பொலிஸ் கண்காணிப்பாளர் விசாரணையைத் தொடங்கியுள்ளதோடு, காணொளியில் உள்ள நபர் மீதான தாக்குதல் தொடர்பாக கொகரெல்ல பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியை இடைநீக்கம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து குருநாகல் மாவட்ட I பொலிஸ் அத்தியட்சகர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார். (Video-FB)