பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்த எச்சரிக்கை.!

0
24

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்த எச்சரிக்கை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

கொழும்பு முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரப் பகுதிகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55-60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில், கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும்.

எனவே மீனவர்களும் கடல்சார் சமூகத்தினரும் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவநிலையின் தீவிரம் காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களிலும், 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.