தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரின் வாகனம் மீது துப்பாக்கி சூடு..!

0
5

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ உட்பட மூன்று பேரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு இன்று (17) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகளை தீர்த்துவிட்டு அவருக்குச் சொந்தமான ஆவணங்களின் கோப்புகளை பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தை பகுதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில் ஜனாதிபதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை துஷித ஹல்லொலுவ வெளியிட்டதுடன், தேசிய லொத்தர் சபையில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக அவரிடம் விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Photo-fb)