புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் பெண்ணொருவர் உயிரிழப்பு..!

0
37

வலகப்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் நேற்றையதினம் (14) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் வந்த பெண் ஒருவர் பாதையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இவ் விபத்து நேர்ந்துள்ளது.

சிலாபம் கொழும்பு வீதியாக சென்ற ‘மந்தஹாமி’புகையிரதத்திலேயேஇந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (Photos-FB)