யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதி பளை பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (11) யாழில் இருந்து காலை 6.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் 07.30 மணியளவில் பளை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதி தள்ளியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.