முல்லைத்தீவு மாவட்டத்திற்க்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவு வெளியாகியுள்ளது..!

0
1

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி (ITAK) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) 1364 வாக்குகள் – 04 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 990 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 808 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 607 வாக்குகள் – 02 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 500 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்