யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளங்குடும்பப் பெண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கரை ஒதுங்கி உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக கரை ஒதுங்கியவர் 36 வயதுடைய சக்தி கோவிலடி தும்பளை கிழக்கை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் தர்சன் தக்சயா எனத் தெரியவருகின்றது.
கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் உயிரிழந்தவரும் இவருடைய மகனும் தும்பளையில் வசித்து வந்துள்ளனர்.
கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.