முல்லைத்தீவில் புதையல் தோண்டிய 5 பேர் கைது.!

0
38

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் புதையல் தோண்டும் போது, முல்லைத்தீவு சிறப்புப் படை முகாமின் என்.சி.பி. என்.சி.எஸ். விஜேரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

01-05_25 அன்று கைது செய்யப்பட்டார் கொக்கிளாய் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் இராணுவ பொறியியலாளர் படையின் ஓய்வுபெற்ற கப்டனும், கடைசியாக கொக்காவில் முகாமில் கடமையாற்றியவருமாவார். அவர் 2018 இல் ஓய்வு பெற்றுள்ளார்

கைது செய்யப்பட்ட மற்றும் ஒருவர் ஓய்வு பெற்ற துணை காவல் ஆய்வாளர் ஆவார், கடைசியாக குருநாகல் தலைமையக காவல் நிலையத்தில் பணியாற்றி 2021 இல் ஓய்வு பெற்றுள்ளார் விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 2025.05.02 இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்