மே தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் பிரதேச செயலகப் பகுதிகளில் செயல்படும் சில்லறை மதுபான விற்பனை நிலையங்கள் நாளை மூடப்படும் என்று கலால் துறை அறிவித்துள்ளது.
மேலும் அந்தப் பிரதேசங்களில் காணப்படும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுள்ள உணவகங்களுக்கு இது பொருந்தாது என மதுவரித் திணைக்களம் தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
எனினும் குறித்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க 1913 அல்லது 0112 877 688 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.