
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவர் சிலுவையில் இருந்து செவ்வாய்க்கிழமை (28) நீர் கசிந்துள்ளது.
ஆண்டவர் சிலுவையின் கால் விரல் பகுதியில் இருந்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நீர் கசிந்தது.
சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் ஆண்டவரின் காலில் இருந்து வழிந்தோடும் நீரை எடுத்துச் சென்றனர்.
சகோதர மதத்தினர், இராணுவத்தினர், பொலிஸார், என பலர் இந்த காட்சியை பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் பிடித்தனர்.
சம்பவம் தொடர்பாக ஆலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக தகவல்களை வெளியிட முடியும் என கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மழை காரணமாக சிலைக்குள்ளே மழை நீர் சென்றிருக்கலாம் எனவும், அந்த நீரே கால் வழியாக சிந்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.









