மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது.!

0
353

கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, குறித்த 251 பேர் உள்ளடங்களாக போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக மொத்தமாக 8,747 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.