மட்டக்களப்பில் மாணவி எடுத்த முடிவு.!

0
395

அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட மட்டக்களப்பு மாணவி.

மட் / மமே / கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த 18 வயதான விக்கினேஸ்வரன் சுஜிதா என்ற மாணவி அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதனால் சுகவீனமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கல்வியில் சிறந்து விளங்கிய இம் மாணவியின் இழப்பு அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளவயது மரணங்கள் தொடர்ந்து ஏற்படுவது எம்மையும் கவலைகொள்ள வைக்கிறது .

வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை நிறைவுறுத்துகின்ற தீர்மானங்களை எடுக்காமல் எதையும் எதிர்கொண்டு வெற்றிபெற்று வாழ்க்கையை முன்னெடுக்கவேண்டும்.

உயிரிழந்த மாணவியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.