இன்று (21) காலை நடந்த விபத்தில் இருவருக்கு நேர்ந்த சோகம்

0
221

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொட்டாவையில் இருந்து காலி நோக்கி பயணித்த வேன் ஒன்று முன்னால் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 62 வயதுடைய நபரும் மற்றுமொரு பயணியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மூன்று பெண்கள் உட்பட நால்வர் காயமடைந்து சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.