பாடசாலை மாணவர்களுக்கு விசேட உதவித் தொகை.!

0
318

அஸ்வெசும பெறும் பெற்றோர்களது மற்றும் விசேட காரணங்களுக்காக சிறுவர் இல்லங்களில் உள்ள பிள்ளைகளுக்காக பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் பாடசாலை தவணையில் இருந்து இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில், பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்று (02) அனுமதி கிடைத்ததாக ஆளும் கட்சியின் பிரதான கொறடா அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.