மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு..!

0
205

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் க.பொ.த உயர்தர பரீட்சை இடம்பெறும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகி ஜனவரி 17 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.