திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்..!

0
330

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

  • தேசிய மக்கள் சக்தி (NPP)- 87,031 வாக்குகள் (2 ஆசனங்கள்)
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 53,058 வாக்குகள் (1 ஆசனம்)
  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 34,168 வாக்குகள் (1 ஆசனம்)
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 9,387 வாக்குகள்
  • ஜனநாயக தேசிய கூட்டணி (DNA)- 4,868 வாக்குகள்