மற்றுமொரு மோட்டார் சைக்கிள் விபத்து – 28 வயது இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.!

0
196

கொழும்பு – இரத்தினபுரி வீதியில் தலாவிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த லொறி ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த பாரஊர்தி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இரத்தினபுரி, கலவானை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஆவார். இதனையடுத்து பாரஊர்தியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.