வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு.!

0
232

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த பகுதிக்கு வந்த பதில் நீதிவான் தி.திருவருள் சட்டத்தினை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதேவேளை குறித்த நபரின் உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.