மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; சிக்கிய பெண்கள்.!

0
101
Common photo

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி வீதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக் கைது நடவடிக்கை நேற்று (01) காலை இடம்பெற்றதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருவன்வெல்ல மற்றும் பசறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 33 மற்றும் 34 வயதுடைய இரு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.