வடக்கு ரயில் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்.!

0
286

வடக்கு ரயில் மார்க்கத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, யாழ்தேவி தொடருந்தை அன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வடக்கு ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – கோட்டையிலிருந்து மஹவ வரை மாத்திரமே தற்போது தொடருந்து சேவை முன்னெடுக்கப்படுகிறது.