இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

0
170

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்படுவதாக பரவி வரும் வதந்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இறக்குமதி வரி அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியாகும் வதந்திகளில் உண்மையில்லை.

வாகன இறக்குமதிக்கு 600% வரி விதிக்கப்படும் என வதந்திகள் பரவி, வாகன இறக்குமதி வரியை அப்படி உயர்த்தினால், யாரும் வாகனங்களை வாங்காத நிலை வரலாம்.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே கூறுகையில், பல வாகன விற்பனையாளர்கள் வதந்திகளை உருவாக்கி மக்களை ஏமாற்றி இருக்கும் இருப்புகளை விற்க முற்படும் நிலையில், வாகன இறக்குமதி தொடங்கிய பின்னர், வாகன சந்தை வழக்கத்திற்கு மாறாக வீழ்ச்சியடையும். உயர் நிலை வாகனங்கள் நியாயமான விலைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.