சிலாபம் வீதியில் விபத்து – ஆட்டொ சாரதிக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
112
Common Photo

வாரியப்பொல – சிலாபம் வீதியில் இன்று சனிக்கிழமை (28) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது, முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இருவரும் காயமடைந்துள்ள நிலையில் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கெப் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.