யாழில் பிறந்து அடுத்த தினமே சிசுவுக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
99

யாழில் பெண் குழந்தை ஒன்று பிறந்து அடுத்த தினமே உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

2ஆம் குறுக்குத்தெரு சென்மேரிஸ் வீதி, நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த செல்டன்புஸ் ரோசாமேரி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…

குறித்த குழந்தை கடந்த 17ஆம் திகதி பிறந்து, அடுத்த நாளான 18ஆம் திகதி பரிதாபமாக வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சிசுவின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளுக்காக உத்தரவிடப்பட்டுள்ளது.