முல்லைத்தீவு ஐயங்கன்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு.!

0
137

முல்லைத்தீவு ஐயங்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காட்டுப் பகுதியை அண்மித்துள்ள பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தின் பின் பகுதியிலேயே குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக ஐயங்கன் குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.