இலங்கையை உலுக்கிய கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு.!

0
163

பிபில – மஹியங்கனை பிரதான வீதியின் வெகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (12) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனியார் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.